Thursday, August 12, 2010

ஒற்றைச்சிறகு

கடவுச்சீட்டில்லை...
மொழியறிவுமில்லை...
பிறகெப்படி
கண்டம் கடக்கின்றன
இந்தப்பறவைகள்...
மனதெழுப்பிய கேள்விகளுக்கு
விடையாய்
தன் ஒற்றைச்சிறகை
உதிர்த்து சென்றது
புலம் பெயரும் பறவையொன்று!
பதிலை பத்திரமாய்
பாதுகாத்துக்கொண்டிருக்கிறது
என் மனம்

No comments:

Post a Comment