Thursday, August 12, 2010

பட்டாம்பூச்சியின் பாதச்சுவடு

நூற்றுக்கணக்கான
மலர்களுக்கிடையே
ஈரிதழ் மட்டும்
சிறகு முளைத்து
பறந்து விட்டன
காற்றின் நேர்கோட்டு திசையில்
வண்ணங்கள் யாவும்
உதிர்த்து சென்ற
இதழ்களை
உற்று நோக்கும் போதுதான்
தெரிந்தது...
பட்டாம்பூச்சி
பறந்து சென்ற
பாதையின் சுவடு

2 comments: