Sunday, November 7, 2010

தனிமைகளின் கூட்டம்


குழந்தைகளின் கிறுக்கள்கள்
ஏதுமற்ற சுவர்.....

பார்வையாளர்கள் எவருமற்ற
விளையாட்டு அரங்கு....

பறவைகள் ஓசையற்ற
பூந்தோட்டம்....

ரசிக்க எவருமற்ற
மழைக்கால வானவில்....

நட்சத்திர கூட்டம்
இல்லாமல் போன வானம்...

சமயங்களில்
தனிமையை ரசிக்க
யாருமில்லாமற் போன போது
தனியாகவே
காத்திருத்தல் ஆரம்பமாகிறது....

தனக்கு தோழமையாய்
மற்றுமொரு தனிமை வேண்டி!

3 comments:

  1. ////ரசிக்க எவருமற்ற
    மழைக்கால வானவில்....////
    நல்லாயிருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ம.தி.சுதா

    ReplyDelete