நந்தவனத்தின்
தரை முழுமையும்
அழகழகாய்
பரவிக்கிடந்தன....
போகன்வில்லா பூக்களும்
மஞ்சள் நிற அரளியும்
வெள்ளை செம்பருத்தியும்....
பூக்களுக்கு இடையூன்றி
தன் பாதம் படாதவாறு
பூனை நடைபயின்று
இரு செம்பருத்திகளை
சாமிப்படத்திற்கென
பறித்து சென்றாள்
வீட்டுக்கார சிறுமி!
உதிர்ந்த மலரிதழ்களுக்கு ஊடாய்
பதிந்து கிடந்த - அவள்தம்
குட்டி பாதச்சுவடுகளை
தம் பூக்களால்
அர்ச்சித்துக் கொண்டிருந்தன
நந்தவனச்செடிகள் - அன்றைய
நாள் முழுவதும்!
No comments:
Post a Comment