Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Wednesday, September 22, 2010

துயர் பாஷை



மிக அழகான கூண்டில்
உணவு... தண்ணீருடன்..
அடைக்கப்பட்டிருந்தது
அந்தக்கிளி
அலகில் சிவப்பும்
உடலில் பச்சையும் பூசிக்கொண்டு
போவோர் வருவோர்
எல்லோரையும்
தன் கீச்சுக்குரலில்
இடைவிடாது விளிக்கிறது....

ஒருவேளை
கிளியின் பாஷையில்
அதன் துயர்பகிர
தேர்ந்த சொற்கள்
இல்லாதிருக்கவும் கூடும்.

கவிமாயாவி